இலங்கையில் அமைகிறது திருப்பதி கோயில்.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் திடீர் அறிவிப்பு

விசாகப்பட்டினம்:
இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை அமைக்கப்படும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுடன் நேற்று நடந்த சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
மிகப்பெரிய பொருளாதார பாதிப்பில் சிக்கி சீர்குலைந்து போயிருக்கும் இலங்கை, தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சில மாதங்களுக்கு முன்பு அங்கு சில மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதில் செல்வ செழிப்புமிக்க மாகாணமான கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக தமிழர் செந்தில் தொண்டைமான் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை செந்தில் தொண்டைமான் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கிழக்கு மாகாணம் – ஆந்திரா இடையேயான நட்புறவு, கரும்பு – மிளகாய் விவசாயம், மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

மேலும், BOI ஆடைகள் பூங்கா குறித்தும் , திருகோணமலை துறைமுகத்தில்தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் செந்தில் தொண்டைமான் கோரிக்கை விடுத்தார். இலங்கையில் வயது மூப்பு காரணமாக திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கைக்கு சாதகமான பதிலை முதலமைச்சர் அளித்தார் . இந்த சந்திப்பில் ஆந்திர முதலமைச்சர் அவர்களால் திருப்பதி பெருமாள் சுவாமி சிலை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய துணை தூதர் டாக்டர். வெங்கடேஷ் மற்றும் இலங்கை நாட்டின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.