Simbu: 'எஸ் டி ஆர் 48' படத்திற்காக சிம்பு செய்யப்போகும் காரியம்: இதை சத்தியமா எதிர்பார்க்கல..!

சிம்பு நடிப்பில் தற்போது ‘எஸ்டிஆர் 48’ படம் உருவாகி வருகிறது. மாநாடு படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ள சிம்பு, தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் இந்தப்படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிம்பு தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதனையடுத்து ‘மாநாடு’ படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இந்தப்படம் வசூலில் மாஸ் காட்டியது. இந்தப்படத்தை தொடர்ந்து தனது ஆஸ்தான இயக்குனர் கெளதம் மேனன் கூட்டணியின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படமும் வசூலில் சக்கை போடு போட்டது. இதனிடையில் சிம்பு ஏற்கனவே நடித்து உருவான ‘பத்து தல’ படத்தை ரிலீஸ் செய்யும் பணியும் மும்முரமாக நடைபெற்றது. இந்தப்படம் மூலம் ஹாட்ரிக் ஹிட்டடித்தார் சிம்பு. இந்தப்படங்களை தொடர்ந்து எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் சிம்பு. இந்நிலையில் உலக நாயகனின் ராஜ்கமல் பிலிம் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு.

இவர் ஏற்கனவே துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியவர். இவரது இயக்கத்தில் தற்போது சிம்பு நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்தப்படத்தில் வரலாற்று சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறவுள்ளதாகவும், இதற்காக பெரும் பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Adipurush: வெடித்த சர்ச்சை.. கை கூப்பி மன்னிப்பு கேட்ட ‘ஆதிபுருஷ்’ பட வசனகர்த்தா.!

இந்தப்படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சிம்பு இந்தப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாக இணையத்தில் தீயாய் செய்திகள் பரவி வருகிறது. ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் அவரே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வில்லன் கேரக்டருக்காக சிம்பு உடலை ஏற்றி நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், ஒருவேளை நிஜமாகே சிம்பு ஹீரோ, வில்லனாக இரட்டை வேடங்களில் நடித்தால் வெறித்தனமாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகினறனர். இதனால் ‘எஸ்டிஆர் 48’ படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது.

Maamannan: மாமன்னனை விரும்பி பார்த்த முக்கிய பிரமுகர்கள்: மாரி செல்வராஜுக்கு அளித்த பரிசு.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.