திருத்தணி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் அரசுப் பேருந்தை திருத்தணி மக்கள் சிறை பிடித்து மறியல் செய்துள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட முருகூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திருத்தணிக்குப் பேருந்தில் சென்று படிக்கும் சூழல் இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்ல பேருந்தைத்தான் நம்பி உள்ளனர். கடந்த சில நாட்களாகப் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் முருகூர் பேருந்து நிறுத்தத்தில் […]