சி.எஸ்.கே கேப்டன் தோனிக்கும் ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதா? – அம்பத்தி ராயுடு விளக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜாவுக்கும் அந்த அணியின் கேப்டன் டோனிக்கும் இடையே மோதல்கள் இருந்து வருவதாக அவ்வப்போது பரவலாக தகவல்கள் வெளியாகின. இந்த வருடம் ஐபிஎல் போட்டியின் இறுதிக் கட்டத்தில்கூட ஜடேஜா – டோனி இடையே பிரிவு ஏற்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எனினும், இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய ஜடேஜா அணி கோப்பையை வென்று சாதனை படைக்க உறுதுணையாக இருந்தார்.

இந்த நிலையில், டோனி – ஜடேஜா இடையே பிரிவு என்பது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் ராயுடு கூறியதாவது, “2022-ல் ஜடேஜாவுக்கு டோனியின் மீது அதிருப்தி எல்லாம் இல்லை. ஜடேஜா 2022-ம் ஆண்டு தன் தலைமையில் சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடவில்லை என்றுதான் கவலையாக இருந்தார். அந்த சீசனில் சிஎஸ்கேவில் யாரும் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஜடேஜாவின் ஆட்டத்தைக் கண்டு டோனி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.