Mari Selvaraj: நாங்குநேரி கொடூர சம்பவம்: ஜி.வி. பிரகாஷ், மாரி செல்வராஜ் விளாசல்.!

இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார் நடிகராகவும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். சினிமா சம்பந்தமாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகள் பல குறித்தும் குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில் நாங்குநேரி சம்பவம் தொடர்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருநெல்வேலி அருகில் உள்ள நாங்குநேரி எனும் ஊரில் கூலி தொழிலாளர்களான முனியாண்டி மற்றும் அம்பிகாபதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் சின்னத்துரை என்ற மகனும், 14 வயதில் மகளும் உள்ளனர்.இவர்கள் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இரவு இவர்களது வீட்டில் 10.30 மணி அளவில் 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Jailer: ஜெயிலருக்காக முதலமைச்சரிடம் வந்த வாழ்த்து: நாம ஜெயிச்சிட்டோம் நெல்சா..!

இந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரணையில் சின்னத்துரை படிக்கும் பள்ளியில் சில மாணவர்கள் அவரை தொந்தரவு செய்துள்ளனர். இதுக்குறித்து பெற்றோரிடம் கூறி, தலைமையாசியரிடம் சின்னத்துரை புகார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

20 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் ஜோடி சேர போகும் பிரபல நாயகி: ‘தளபதி 68’ படத்தில் செம்ம ட்விஸ்ட். !

இந்நிலையில் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்’ என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

அதே போல் இயக்குனர் மாரி செல்வராஜ் தம்முடைய பதிவில், ‘கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போக சொல்லி, உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.