ஜப்பானின் 'ஸ்மார்ட் லேண்டர்' நிலவு திட்டம் ஒத்திவைப்பு… மோசமான வானிலையால் அதிரடி முடிவு!

நிலவில் ஆய்வு செய்யும் ஆர்வம் உலக நாடுகள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் தடம் பதித்திருந்தன. இந்நிலையில் அந்தப் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்தது.

கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23 ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதுவும் இதுவரை எந்த நாடும் செல்லாது நிலவின் தென் துருவத்தில் தடம்பதித்துள்ளது இந்தியா. கடந்த 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது.

சென்னை டூ திருப்பதி: லட்டு மாதிரி கிடைச்ச வந்தே பாரத்… ஹைதராபாத்துக்கு பெத்த ஜாக்பாட்!

அதன்பிறகு 6 மணி நேரம் கழித்து அதில் இருந்த பிரக்யான் ரோவர் நிலவில் தடம்பதித்து தனது பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இதனை இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் உறுதிப்படுத்தி வருகிறது. இதனிடை கடந்த 10 ஆம் தேதி ரஷ்யா நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் வேகமாக மோதி நொறுங்கியது.

தமிழ்நாடு டூ இஸ்ரோ – தமிழர்களால் சந்திரயான் 3 சக்சஸ்

ஆனால் இந்தியாவின் நிலவு திட்டமான சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றிருப்பது உலக நாடுகளுக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது. அந்த வகையில் ஜப்பானும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்புகிறது. ஸ்லிம் என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப உள்ளதாக ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா அறிவித்தது.

லேண்டரில் இருந்து ஒய்யாரமாய் இறங்கிய ரோவர்… வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ!

வரும் 27 ஆம் தேதி ஸ்மார்ட் லேண்டர் எனப்படும் கனவு திட்டத்திற்காக ஸ்லிம் விண்கலத்தை தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து செலுத்த ஜப்பான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக விண்கலத்தை ஏவும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளது. அதன்படி வரும் 28 ஆம் தேதி ஸ்லிம் விண்கலம் ஏவப்படும் என ஜப்பானின் ஜாக்ஸா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

இந்த விண்கலம் 4 முதல் 6 மாதங்களில் நிலவின் மேற்பரப்பை அடையும் என்றும் ஜப்பானின் ஜாக்ஸா மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் ஸ்மார்ட் லேண்டர் திட்டம், இந்தியாவின் சந்திரயான் -3 லிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆனால் சந்திரயான் போன்ற எதிர்கால நிலவு பயணங்களுக்கு இந்த ஸ்மார் லேண்டர் திட்டம் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எனக்கு ஒரு பொண்ணு பார்க்க முடியலையா?’ அம்மாவை கல்லால் அடித்துக்கொன்ற மகன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.