பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு அரசு அதிகாரிகள் நோட்டீஸ்: ஒரு வாரத்திற்குள் விளக்கம் தேவை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடிகர் பிரகாஷ் ராஜ் வீடு கட்டி வருகிறார். மேலும் நடிகர் பாபி சிம்ஹாவும் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்.

அஜித், கலைஞரை எதிர்த்து பேசவே இல்லை? – கோடாங்கி ஆபிரகாம்
இந்நிலையில் அவர்கள் அனுமதியின்றி வீடு கட்டுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த வீடுகளை ஆய்வு செய்தார்கள்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இதையடுத்து பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பேரும் 7 நாட்களுக்குள் உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாபி சிம்ஹா தன் தாயார் பெயரில் இருக்கும் நிலத்தில் வீடு கட்டுகிறார். அதற்காக கடந்த 2019ம் ஆண்டு அனுமதி வாங்கியிருக்கிறார். ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மாடிகளுடன் வீடு கட்டி வருவது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

பிரகாஷ் ராஜோ எந்தவித அனுமதியும் பெறாமல் வீடு கட்டி வருகிறார் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 21ம் தேதி கொடைக்கானலில் இருக்கும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தான் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோரின் வீடுகள் குறித்து மக்கள் புகார் தெரிவித்தனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

அந்த கூட்டத்தில் பேத்துப்பாறை ஊர் தலைவர் மகேந்திரன் கூறியதாவது,

வில்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் நடிகர் பாபி சிம்ஹா விதிகளை மீறி 3 அடுக்கு மாடி கட்டிடம் கட்டி வருகிறார். மலைக்கிராம விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை அவர் ஆக்கிரமித்திருக்கிறார். அந்த வழியாக செல்லும் விவசாயிகளை தரக்குறைவாக பேசுகிறார் என்றார்.

பிரகாஷ்ராஜ் தான் கட்டி வரும் வீட்டிற்கு செல்லும் பொதுப்பாதையை ஆக்கிரமித்து சிமெண்ட் போட்டு சாலை அமைத்து பயன்படுத்துகிறார் என புகார் தெரிவிக்கப்பட்டது.

மகேந்திரன் மற்றும் மலைக்கிராம மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்தே சோதனை நடத்தி பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.

கேப்டன் விஜயகாந்தால் தனுஷ் வீட்டில் ஒரு டாக்டர்: அவர் குணம் யாருக்கு வரும்!

புகார்கள் கிடைத்த உடன் கொடைக்கானல் நகர நில அளவை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேத்துப்பாறைக்கு சென்று பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கட்டி வரும் வீடுகளை ஆய்வு செய்து அளவீடு செய்தார்கள்.

கட்டிட பிரச்சனை குறித்து வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவி பாக்கியலட்சுமி கூறியதாவது,

பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கட்டும் கட்டிடங்களுக்கு அனுமதி பெறவே இல்லை என்றார்.

இதற்கிடையே பிரகாஷ் ராஜ் வீடு கட்டி வரும் இடத்தில் யானைகள் நடமாட்டம் உள்ளது என வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்கள். இது குறித்த அறிக்கையை விரைவில் வெளியிடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.