எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் மாற்றம் ஏன்? தமிழ்நாடு டூ டெல்லி… தொழில்துறைக்கு அடுத்த செயலாளர் யார்?

பல்வேறு மாநிலங்கள் மற்றும் துறைகளை சேர்ந்த 15 ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அடங்குவர். அவர்கள் எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் நீரஜ் மிட்டல் ஐஏஎஸ். இதில் எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தமிழக தொழில்துறையின் செயலாளராக இருந்தவர். அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கான முக்கிய பொறுப்பில் இருந்தவர்.

ஐஏஎஸ் அதிகாரி ஜோதி நிர்மலா பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

தொழில்துறை செயலாளர்

அதுமட்டுமின்றி ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவில் வீறுநடை போடுவதற்கான பாதையில் முக்கியமான நபராக திகழ்ந்து வந்தார். ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்ததும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பக்க பலமாக திகழ்ந்தார். அதன்பிறகு நடந்த அமைச்சரவை மாற்றத்தில் டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை அமைச்சர் ஆனார்.

எஸ்.கிருஷ்ணன் பணியிடமாற்றம்

இவருக்கு உறுதுணையாக எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாத இறுதியில் தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் பொறுப்பேற்றார். இதையடுத்து தான் பணியிட மாறுதலுக்கு எஸ்.கிருஷ்ணன் அடிபோடுவதாக தகவல் வெளியானது. என்ன காரணம் என்று விசாரித்தால் சிவ்தாஸ் மீனா, எஸ்.கிருஷ்ணன் இடையில் சீனியாரிட்டி விஷயத்தில் ஈகோ போட்டி நிலவுகிறதாம். அதனால் மத்திய அரசு பணிக்கு மாறுதலாகி செல்ல திட்டமிட்டிருப்பதாக பேசப்பட்டது.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா

ஆனால் இருவருமே 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர்கள். அப்புறம் எப்படி சீனியாரிட்டி பிரச்சினை வந்தது என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். வேறு ஏதேனும் உள்ளடி அரசியல் இருக்கிறதா? என்று விசாரித்தால் அப்படி எதுவும் இல்லை என்கிறது கோட்டை வட்டாரம். இத்தகைய கேள்விகளுக்கு இடையில் ஒருவழியாக டெல்லியில் இருந்து சிக்னலும் வந்துவிட்டது.

மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசின் அமைச்சரவை நியமனக் குழு (ACC) செயலாளர் தீப்தி உமாசங்கர் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சக செயலாளராக எஸ்.கிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மத்திய அரசு பணி என்பது கவனிக்கத்தக்கது. 2004 – 2007 காலகட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தனிச் செயலாளராக பணியாற்றினார்.

உலக முதலீட்டாளர் மாநாடு

எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டதால் தமிழக தொழில்துறை செயலாளர் பதவி காலியாகியுள்ளது. இந்த இடத்திற்கு சரியான நபரை நியமிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இளம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் வேகத்திற்கு ஏற்ப தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். மேலும் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு இன்னும் 4 மாதங்களே இருக்கின்றன. இதற்கான பணிகள், ஒரு ட்ரில்லியன் பொருளாதார கனவு, தமிழகத்திற்கு புதிய தொழில் வாய்ப்புகளை பெற்று தரும் களப் பணி என எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீரஜ் மிட்டல் மாற்றம்

அதற்கு நல்ல அனுபவமும், திறமையும் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். இதையடுத்து தமிழகத்தில் மாற்றப்பட்ட மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் மிட்டல். இவர் மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் செயலாளராக இருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.