சிங்கப்பூர் அதிபராகும் தமிழர்? அதிக வாக்குகளுடன் முந்தும் தர்மன் சண்முகரத்தினம்!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் இன்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

சிங்கப்பூர்சிங்கப்பூர் அதிபராக உள்ள ஹலிமா யாகூப்பின் பதவி காலம் வரும் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அதிபர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மலாய் சமூக மக்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர்.
​ ஆகஸ்ட்டில் விழுந்த சரியான அடி… 122 ஆண்டுகளுக்குப் பிறகு மழை செய்த சம்பவம்… வானிலை மையம் பகீர்!​சிங்கப்பூர் அதிபர் தேர்தல்
இதனால் ஹலீமா யாகூப் போட்டியின்றி அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இம்முறை விதிகள் மாறிவிட்டன. இதையடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம், சீன வம்சாவளியை சேர்ந்த இங் காக் சோங், மற்றும் டான் கின் லியான் உள்ளிட்ட 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
3 வேட்பாளர்கள்ஆனால் தர்மன் சண்முகரத்தினம், இங் காக் சோங், மற்றும் டான் கின் லியான் ஆகிய 3 பேரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்நாட்டின் கேபினட் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம்.
​ சம்பளம் உயர்வு அறிவிப்பு: கிராம அமைப்பு உதவியாளர்கள் ஹேப்பி – கேசிஆர் கொடுத்த சர்ப்ரைஸ்!​இன்று வாக்குப்பதிவு
வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுவது உறுதியான நிலையில் 3 வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிது. 27 லட்சம் வாக்காளர்களை கொண்ட சிங்கப்பூரில் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆர்வமாக வாக்களிப்பு1264 வாக்குச்சாவடிகளில் முதியவர்கள், முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள், இளைஞர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், பெரியவர்கள் என பலரும் அடுத்த அதிபரை தேர்வு செய்ய ஆர்வமாக வாக்களித்து வந்தனர். இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
​ கியர் போட்டாச்சு… இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும்… குட் நியூஸ் சொன்ன இந்திய வானிலை மையம்!​85% வாக்குப்பதிவுமாலை 5 மணி நிலவரப்படி, வாக்குப்பதிவு முடிவடைவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன், 2,302,996 சிங்கப்பூரர்கள் அதாவது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் சுமார் 85 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக அந்நாட்டின் தேர்தல்கள் டிப்பார்ட்மெண்ட் அறிவித்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள 215 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.​ ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர்… யார் இந்த நிகர் ஷாஜி? இஸ்ரோவை கலக்கும் தென்காசி விஞ்ஞானி!​
தர்மன் முன்னிலை
இரவு 10 மணி முதல் இரவு 11 மணிக்குள், தேர்தல் முடிவுகளின் முன்கூட்டிய குறிப்பை வழங்கக்கூடிய மாதிரி எண்ணிக்கையை அந்நாட்டின் எலெக்ஷ்ன்ஸ் டிப்பார்ட்மெண்ட் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் பிஏபியின் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவரான தர்மன் சண்முகரத்தினம், இந்த மும்முனை போட்டியில் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.