Jawan : ஓ இதனால தான் நயன்தாரா ஜவான் பட நிகழ்ச்சிக்கு வரலையா ??

பாலிவுட் என்ட்ரிஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி போன்றோர் நடித்திருக்கும் ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி இருக்கிறார். மேலும், இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் மூலமாக, இயக்குனர் அட்லீ, நடிகை நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் பாலிவுட்டில் அறிமுகமாகின்றனர்.

ஜவான்ஜவான் திரைப்படத்தில் ஹீரோ ஷாருக்கான் தந்தை, மகன் என டூயல் ரோலில் நடித்திருக்கிறார். தந்தை ஒரு ஹைஜாக்கர், மகன் ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி. தந்தை ஷாருக்கான் அவரது மகனை சிறு வயதிலேயே தொலைத்திருப்பார். பின்னர் தந்தை மகன் என்னவாகிறார்கள் என்பதுதான் கதை. இந்த படத்தில், விஜய் சேதுபதி ஒரு முக்கிய வில்லனாக நடித்துள்ளார். யோகி பாபுவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார். நடிகை தீபிகா படுகோன் மற்றும் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜவான் கிராண்ட் ஈவன்ட்ஜவான் படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகிறது. இதற்காக பல வகையில் ப்ரோமோஷன் வேலைகளை செய்துவருகின்றனர் ஜவான் படக்குழுவினர். அந்த வகையில், கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 30) ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் சென்னையில் நடைபெற்றது. இதற்காக, ஷாருக்கான் சென்னை வந்தார். படத்தின் இயக்குனர் அட்லீ, அவரின் மனைவி ப்ரியா அட்லீ, இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் என பலரும் இந்த ஈவன்ட்டில் கலந்துக்கொண்டனர். ஆனால், இந்த படத்தின் ஹீரோயின் நயன்தாரா கலந்துக்கொள்ளவில்லை. அவர் ஏன் வரவில்லை என கேள்விகள் வந்துகொண்டிருக்கின்றன.

இன்ஸ்டாகிராம் வந்த நயன்ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்க்கு வருகை தராத லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனக்கான இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார். அதில் தனது முதல் பதிவாக ஜவான் படத்தின் ட்ரைலரை பதிவிட்டிருக்கிறார். அதுவும் “My first with my Favvv” என கேப்ஷன் இட்டிருக்கிறார். அவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய ஒரே நாளில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்றுவிட்டார். உடன், அவர்களின் மகன்களான உயிர் மற்றும் உலகுடன் இருக்கும் விடியோ மற்றும் போட்டோவை பகிர்ந்திருக்கிறார். எனினும், ஜவான் பட விழாவில் அவர் ஏன் கலந்துக்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பிவருகின்றனர் ரசிகர்கள்.

ஆப்சென்டான நயன்நயன்தாரா முன் எப்போதோ கொடுத்திருந்த நேர்காணலில் இதற்கான பதில் இருக்கிறது. அப்போது அவர் கூறுகையில், “முன்பெல்லாம் படத்தின் நிகழ்ச்சிகளுக்கு செல்வது வழக்கம். அனால், சமீப காலமாக பட நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை, ஏனென்றால், நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகம் அறிய விரும்பவில்லை. நான் மிகவும் தனிப்பட்ட நபர். கூட்டத்துடன் நான் இருக்கும்போது அது சரியானதாக அமைவதில்லை. அந்த மாதிரியான சமயங்களில், நான் பலமுறை தவறாகக் கூறப்பட்டு, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். அந்த மாதிரியான நிகழ்வுகளை என்னால் கையாள முடியவில்லை. நடிப்பதுதான் என் வேலை. அந்த நடிப்புக்கான நேர்த்தியை திரைப்படங்களின் வெற்றி பேச வேண்டும்” எனக் கூறியிருக்கிறார். இந்த நேர்காணலில் கூறப்பட்டதுதான் நயன் நிகழ்வுக்கு வராததற்கு காரணம் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.