வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஆதித்யா எல் 1… இலக்கை அடைய இத்தனை நாட்களா?

ஆதித்யா எல் 1

நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது இஸ்ரோ. ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் இன்று காலை சரியாக 11. 50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு தனது பயணத்தை தொடங்கியதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கைகளை தட்டி கொண்டாடினர்.

1485 கிலோ எடை

இதற்கான 24 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. 1485 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல் விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்ய உள்ளது. சூரியனுக்கும் பூமிக்குமான தொலைவு 15 கோடி கிலோ மீட்டர் உள்ள நிலையில் அதில் வெறும் 1% தூரம்தான் ஆதித்யா எல் 1 விண்கலம் பயணம் செய்யவுள்ளது. இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து சூரியனின் சுற்றுவட்டப் பாதையை அடையும்.

அப்பாடா.. சூப்பர் நியூஸ் சொன்ன இந்திய வானிலை மையம்.. இந்த வார இறுதியில் சரியான சம்பவம் இருக்காம்!

7 விதமான கருவிகள்

பின்னர் பூமிக்கும் சூரியனுக்கும் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் உள்ள லாக்ராஞ்சியான் பாயிண்ட் 1 என்ற பகுதியில் ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை நோக்கிய கோணத்தில் நிலைநிறுத்தப்படும். இந்த ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள 7 விதமான கருவிகள் சூரியனின் வெப்ப சூழல், கதிர் வீச்சு மற்றும் சூரியனில் உள்ள துகள்கள் ஆகியவைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளது.

சாவல் மிக்கது

ஆதித்யா எல்1 விண்கலம் தொழில்நுட்ப ரீதியாக சவால் மிக்கது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலம் விண்ணில் பாய்ந்ததை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கேலரிகளில் அமர்ந்து ரசித்தனர்.

ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர்… யார் இந்த நிகர் ஷாஜி? இஸ்ரோவை கலக்கும் தென்காசி விஞ்ஞானி!
முதல் முறையாக

இதேபோல் ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் பாயும் நிகழ்வை காண சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த. சூரியனை ஆய்வு செய்வதற்காக முதல் முறையாக இந்தியா ஆதித்யா விண்கலத்தை அனுப்பியுள்ளது.

இயல்பாக உள்ளது

பிஎஸ்எல்வி சி57 ராக்கெட்டில் இருந்து பேலோடு வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்ணில் ஏவிய 73வது நிமிடத்தில் புவி வட்டப்பாதையில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்பட உள்ளது. ஆதித்யா விண்கலத்தின் பயணம் திருப்திகரமாக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் ராக்கெட்டின் பயணம் இயல்பாக உள்ளதாகவும் அடுத்தடுத்த கட்டங்களை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.