கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஜாக்பாட்: ஒரே அறிவிப்பில் உயர்ந்த ஊதியம் – தமிழக அரசு அதிரடி!

அரசு பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 423 கௌரவ உதவியாளர்கள் கடந்த கல்வி ஆண்டில் நியமிக்கப்பட்டனர். கௌரவ விரிவுரையாளர்களாக ஏற்கனவே பணியாற்றியவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. அப்போது தகுதியற்றவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

தகுதியான கௌரவ விரிவுரையாளர்கள் விதிமுறைகளின்படியும், கல்வித் தகுதியின் அடிப்படையிலும் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

சேலத்தில் கல்லூரிகளில் கலை கட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

அந்த வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கௌரவ விரிவுரையாளர்களின் மதிப்பூதியம் ருபாய் 20 ஆயிரத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களின் ஊதியம் ரூ 15 ஆயிரத்திலிருந்து ரூபாய் 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அரசு பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் மதிப்பூதியம் ரூபாய் 15 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.