மக்களே, மழை கொட்டித் தீர்க்க போகுது: எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் (செப்டம்பர் 8, 9) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் என நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் செப்டம்பர் 10ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரூரில் கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடியது

இன்று (செப்டம்பர் 8) முதல் செப்டம்பர் 14 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக அடையாறு, திரூர், ஆவடி ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கொரட்டூர், மின்னல், சின்னக்கல்லார் உள்ளிட்ட பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் பல இடங்களில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

நேற்று அதிகபட்சமாக பரங்கிப் பேட்டையில் 36.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.