RIP Thiru. Marimuthu : அவர் மறைவு தமிழ் சினிமாவின் பெரிய இழப்பு ! தமிழ் சினிமாவில் மாரிமுத்து

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மிகுந்த வரவேற்பை பெற்றார் நடிகர் மாரிமுத்து. இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு சினிமாவில் நடித்தும் படங்களுக்கு துணை இயக்குனராக பணிபுரிந்தும் இருக்கிறார். இவரின் பேச்சுக்கு பல விமர்சனங்கள் வந்தாலும் இவருக்கேனே ரசிகர்கள் நிலையாக இருந்து வருகின்றனர்.

மாரிமுத்து

சினிமா இயக்குனராக வேண்டும் என மிகுந்த ஆர்வம் கொண்ட மாரிமுத்து வாய்ப்பை தேடி வரும்போது முதலில் ஹோட்டலில் வெய்ட்டராக பணிபுரிந்தார். வைரமுத்துவின் வரிகளுக்கு இவர் மிகப் பெரிய ரசிகர்.

1993இல் நடிகர் ராஜ்கிரணின் முதல் இயக்கமான அரண்மனைக் கிளியே படத்தில் மாரிமுத்து துணை இயக்குனராக பணியாற்றினார். அதன் பின்னர், ராஜ்கிரணின் எல்லாமே என் ராசாதான் படத்திலும் துணை இயக்குனராக பணியாற்றினார்.

மறைந்தார் மாரிமுத்து

பின்னர் இயக்குனர் மணிரத்னம், இயக்குனர் வசந்த், சீமான், SJ சூர்யா போன்ற இயக்குனர்களின் படங்களிலும் துணை இயக்குனராக பணியாற்றினார் மாரிமுத்து. துணை இயக்குனராக பணியாற்றி வந்த மாரிமுத்து தனது திறமையாலும் கடின உழைப்பினாலும் சிம்பு நடித்த மன்மதன் படத்திற்கு இணை இயக்குனராக பணியாற்றினார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

2008ல் தனது முதல் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக தடம் பதித்தார் மாரிமுத்து. நடிகர் பிரசன்னா மற்றும் உதயத்தாரா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் படம் இயக்குனர் மாரிமுத்துவை தமிழ் திரையுலகில் அடையாளம் காட்டியது. என்னதான் இந்த படம் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும், மாரிமுத்துவை அடையாளம் காட்டியது இந்த படம்தான்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்

சில வருடங்களுக்கு பிறகு, 2014இல் நடிகர் பிரசன்னா, விமல், ஓவியா, அனன்யா நடிப்பில் புலி வால் படத்தை இயக்கினார் இயக்குனர் மாரிமுத்து. இந்த படம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு பெற்றது. இயக்குனராக சில படங்களை இயக்கிய மாரிமுத்து நடிகராக பல படங்களில் நடித்து பேசுபொருளானார். 2010ல் நடிகராக தனது பயணத்தை தொடங்கினார் மாரிமுத்து. இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார் மாரிமுத்து.

அதன்பிறகு, ஆரோகணம், நிமிர்ந்து நில், கொம்பன், மருது, கத்தி சண்டை போன்ற படங்களில் நடித்தார். இவை மட்டுமல்லாமல், இன்னும் பல படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டி ரசிகர்களை ஆனந்தப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்திருக்கிறார். சினிமா மட்டுமல்லாமல், எதிர்நீச்சல் தொடரிலும் நடித்து மாரிமுத்து என்னும் பெயரை மறந்து குணசேகரனாகவே கருதும் அளவிற்கு ஆழமாக பதிந்தார்.

இப்படிப்பட்ட ஒரு திறமையான நடிகரையும் இயக்குனரையும் நல்ல மனிதரையும் தமிழ் சினிமாவிற்கும் தொலைக்காட்சிக்கும் மிகப்பெரிய இழப்பாகவே இருக்கிறது.

Guest Author : Radhika Nedunchezhian

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.