Marimuthu favourite movie: மாரிமுத்துவிற்கு சினிமாவின் மீது ஆசைவர காரணமாக இருந்த படம்..நூறு முறைக்கு மேல் பார்த்துள்ளாராம்..!

மாரிமுத்து இன்று மரணமடைந்த செய்தியை அறிந்து அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சமீபகாலமாக மாரிமுத்து மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்துகொண்டிருந்தார். சினிமாவிலும் சீரியலிலும் கொடிகட்டி பறந்து வந்தார் மாரிமுத்து. எதிர் நீச்சல் என்ற சீரியல் அவருக்கு மிகப்பெரிய ரீச்சை தந்தது.

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர் நீச்சல் சீரியல் அவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது. ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் மாரிமுத்து. இதன் காரணமாக அவருக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகளும் வந்துகொண்டிருந்தன.

சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் கூட முக்கியமான ரோலில் நடித்திருந்தார் மாரிமுத்து. இந்நிலையில் இன்று மரணமடைந்த மாரிமுத்துவிற்கு சினிமாவின் மீது தீராத காதல் வந்ததற்கான காரணமாக இருந்த படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Marimuthu love for cinema: சினிமா மீது கொண்ட காதல்..ஊரைவிட்டு சென்னைக்கு ஓடிவந்த மாரிமுத்து..!

மாரிமுத்து படித்துக்கொண்டிருக்கும் போது அவ்வப்போது படங்களை பார்த்து வந்தார். கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் போது சிவாஜியின் நடிப்பில் பாரதிராஜாவின் இயக்கத்தில் முதல் மரியாதை என்ற திரைப்படம் வெளியானது. அந்த படத்தை பார்த்த பிறகு தான் மாரிமுத்துவிற்கு சினிமாவின் மீது காதல் வந்தது.

சினிமா துறையில் தான் சேரவேண்டும் என்று அன்றே முடிவுசெய்தார் மாரிமுத்து. முதல் மரியாதை படத்தில் சிவாஜியின் நடிப்பும் குறிப்பாக பாரதிராஜாவின் இயக்கமும் அவரிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படம் வெளியானபோது தினமும் முதல் மரியாதை படத்தை திரையில் பார்ப்பாராம் மாரிமுத்து. அதன் பிறகு பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேரவேண்டும் என்ற கனவோடு தான் சென்னைக்கு வந்துள்ளார் மாரிமுத்து. ஆனால் பலமுறை முயற்சித்தும் பாரதிராஜாவிடம் அவரால் சேர முடியவில்லை.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இருந்தாலும் வசந்த், மணிரத்னம், எஸ்.ஜெ சூர்யா என பலரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியிருந்தார் மாரிமுத்து. என்னதான் அவர் இயக்குனராக இருந்தாலும் ஒரு நடிகராகவே மாரிமுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தான் மாரிமுத்துவின் கடுமையான உழைப்பிற்கு பலன் கிடைக்க ஆரம்பித்தது, அதற்குள் அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரே என ரசிகர்கள் வருத்தத்தில் அவருக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.