Marimuthu love for cinema: சினிமா மீது கொண்ட காதல்..ஊரைவிட்டு சென்னைக்கு ஓடிவந்த மாரிமுத்து..!

நடிகரும் பிரபல இயக்குனருமான மாரிமுத்து இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். 57 வயதாகும் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். எதிர் நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போது மயக்கமடைந்த மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

எதிர் நீச்சல் என்ற சீரியலின் மூலம் அனைவரது மனதையும் கவர்ந்த மாரிமுத்து இன்று மறைந்துவிட்டார் என்ற செய்தியை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இந்நிலையில் இன்று பிரபல நடிகராக வலம் வந்துகொண்டிருந்த மாரிமுத்து தன் சிறுவயதில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையோடு சென்னைக்கு வந்துள்ளார்.

Vijay: என் பையனுக்கு பிடித்த ஹீரோ நீதான்பா..பிரபல நடிகரிடம் கூறிய விஜய்..!

தேனீ மாவட்டத்தில் இருக்கும் பசுமலைத்தேரி என்ற கிராமத்தில் தான் வாழ்ந்து வந்தார் மாரிமுத்து. அங்கு தன் பள்ளிப்படிப்பை படித்துக்கொண்டிருந்த மாரிமுத்துவுக்கு சினிமாவின் மீது அதீத ஆர்வம் வந்தது. குறிப்பாக ஒரு இயக்குனராக வேண்டும் என்பது தான் அவரது கனவாக இருந்தது. அதன் காரணமாக தன் ஊரைவிட்டு சென்னைக்கு கிளம்பி வந்தார் மாரிமுத்து.

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என மாரிமுத்து முயற்சித்தார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதையடுத்து தன் பொருளாதார சூழலை சமாளிக்க மாரிமுத்து ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார். காலை சினிமா வாய்ப்பை தேடி சென்றுவிட்டு மதியம் ஹோட்டலில் வேலை செய்து வந்தார் மாரிமுத்து.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அங்கு தான் அவருக்கு இயக்குனர் எஸ்.ஜெ சூர்யாவின் பழக்கம் கிடைத்தது. அதன் பிறகு வைரமுத்துவிடம் வேலை பார்த்து வந்த மாரிமுத்து இயக்குனர்கள் வசந்த், மணிரத்னம், எஸ்.ஜெ சூர்யா ஆகியோருடன் உதவி இயக்குனராக பணியாற்றினார். மேலும் கண்ணும் கண்ணும், புலிவால் என இரண்டு படங்களையும் இயக்கினார் மாரிமுத்து. இந்நிலையில் இன்று ஆதி குணசேகரனாக அனைவரது இதயத்தில் நிலைத்து நிற்கும் மாரிமுத்து நம்மை விட்டு பிரிந்தாலும் அனைவரது இதயத்திலும் நீங்காமல் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.