சென்னை: ஆளுநர் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய மசோதாக்கள் இன்று தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீண்டும் ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் 10 மசோதாக்களை ஆளுநர் கையெழுத்திடாமல் மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. பேரவைத் தலைவர் அப்பாவு உரையுடன் இன்று […]