பைரதி : திட்டிக் கொண்டே இருந்ததால் நண்பரை கொலை செய்த ஜார்க்கண்டை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமண் மஞ்சி, 22, ஜக்தேவ், சந்தன் குமார். பெங்களூரு பைரதியில் தங்கி, வேலை தேடி வந்தனர்.
இதில், லட்சுமண் மஞ்சி, சிறு சிறு விஷயத்துக்கும் கோபப்பட்டு இருவரையும் திட்டிக் கொண்டே இருந்துள்ளார். 16ம் தேதியும் இதுபோன்று திட்டியதால், மூவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
பின், இரவு குடிபோதையில் இருந்த லட்சுமண் மஞ்சியை, ஜக்தேவும், சந்தன் குமாரும் வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று, கீழே தள்ளி, அவர் மீது கற்களை போட்டுக் கொலை செய்தனர்.
மறுநாள் காலையில், லட்சுமண் மஞ்சி கொலை செய்யப்பட்டது குறித்து, கொத்தனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு வந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, விசாரணை நடத்தினர். அவருடன் இருந்த இருவர் குறித்து தகவல் பெற்ற போலீசார், அவர்களை தேடினர்.
ஜார்க்கண்ட் செல்ல, ரயில் நிலையத்தில் நின்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement