"அவரின் கொள்கைகள் பொறுத்து…" – விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து சந்தோஷ் நாராயணன்

`நீயே ஒளி’ இசைக்கச்சேரி வரும் பிப்ரவரி 10-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதன் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

அதில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து சந்தோஷ் நாராயணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த  சந்தோஷ் நாராயணன், “விஜய் சாரின் முடிவு எனக்குச் சந்தோஷம். அவரிடம் உள்ள தனிப்பட்ட நேர்மை அரசியலிலும் பிரதிபலித்தால் நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவரின் கொள்கைகள் பொறுத்து ஓட்டுத் தீர்மானமாகும்.

விஜய்

ஒருவேளை அவர் கட்சி சார்ந்த பாடலை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தால், வெறும் விளம்பரத்திற்காக ஒரு பாடலாகச் செய்ய மாட்டேன். அவரது பணிகள், கொள்கைகள், தொலைநோக்குப் பார்வையில் உண்மை இருந்தால் முழு மனதுடன் செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.