சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் பிரபலமான 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளியை கண்டுபிடிக்க தமிழ்நாடு காவல்துறை. இண்டர்போல் உதவியை நாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் தலைசிறந்த காவல்துறையான ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான தமிழ்நாடு காவல்துறை, இந்த வெடிகுண்டு மிரட்டல் குற்றவாளி களை கண்டுபிடிக்க முடியாமல் திணறிவரும் நிலையில், இண்டர்போல் உதவிய நாடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள 13 […]