ராமேஸ்வரம்: நடுக்கடலில் தத்தளித்த 11 தமிழக மீனவர்களை மீட்டது இந்திய கடற்படையைச்சேர்ந்த விக்ரம் ரோந்து கப்பல் மீட்டு வந்தது. இதையடுத்து, கடற்படை அதிகாரிகள், வீரர்களுக்கு தமிழக மீனவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இதை தடுக்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இறுதி முடிவு எடுக்க முடியாத நிலை தொடர்கிறது. இதற்கிடையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 […]