மோசடி வழக்கில் நிவின்பாலி பட தயாரிப்பாளர் கைது

கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் 'துறமுகம்' என்கிற படம் வெளியானது. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும் கம்மட்டிப்பாடம் உள்ளிட்ட படங்களை இயக்கி பல விருதுகளை வென்ற இயக்குனருமான ராஜீவ் ரவி என்பவர் இயக்கியிருந்தார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் மிகவும் தாமதமாக வெளியாகி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜோஸ் தாமஸ் என்பவர் பண மோசடி செய்தது தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தை தயாரிப்பதற்காக இவர் சில போலியான ஆவணங்களை வழங்கி சுமார் 8 கோடியே 40 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக கில்பர்ட் என்பவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஜோஸ் தாமஸ் அவரது இல்லத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். துறமுகம் படம் தோல்வி அடைந்ததாலும் சரியான சமயத்தில் வெளிவராமல் தயாரிப்பிலேயே நீண்ட தாமதத்தை ஏற்படுத்தியதாலும் ஜோஸ் தாமஸுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு அதை சரியாக திருப்பி செலுத்த இயலாத சூழலில் தான் அவர் இவ்வாறு மோசடி செய்து பணம் பெற்றது தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.