பெங்களூரு : சிறுமி பலாத்கார வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோலாரின், வக்கலேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் வசிப்பவர் மனோஜ், 25. இவர் அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை, 2023 செப்டம்பர் 19ல் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்த கோலார் மகளிர் போலீசார், மனோஜை கைது செய்தனர்.
கோலாரின் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில், மனோஜின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தேவமானே நேற்று தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், அரசுக்கு உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement