சென்னை மக்களவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சிகள் ஒரு சில முக்கிய கோரிக்கைகள் விடுத்துள்ளன. இன்று சென்னையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான 2 நாட்கள் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. ராஜீவ்குமார் முதல் நாளான இன்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளைத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சியினர் முன்வைத்தனர். பெரும்பாலானோர் தேர்தல் வெளிப்படைத்தன்மையோடு அச்சம், பதட்டம் […]