Blind couple killed in bike accident | பைக் மோதிய விபத்து பார்வையற்ற தம்பதி பலி

நெலமங்களா : பார்வையற்ற தம்பதி, சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

பெங்களூரு ரூரல், நெலமங்களாவின், யன்டகானஹள்ளியில் வசித்தவர் ஸ்ரீதர், 52. இவரது மனைவி அர்ச்சனா, 45. இருவருமே பார்வையற்றவர்கள். இதற்காக சிகிச்சை பெற்று வந்தனர்.

மருத்துவமனைக்கு செல்வதற்காக, நேற்று காலை யன்டகானஹள்ளியில் இருவரும் கையை பிடித்தபடி, சாலையை கடந்து சென்றனர். அப்போது வேகமாக வந்த பைக் மோதியதில், பலத்த காயமடைந்த தம்பதி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

விபத்துக்கு காரணமான பைக் பயணியும் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து நெலமங்களா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.