டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 25-ம் தேதியன்று, சுகாதாரத் துறை சார்பில் தமிழகத்தில் சுமார் ரூ.313.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள 14 திட்டங்களை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்தியஅரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 25 அன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது நாடு முழுவதும் ரூ.11,391.79 […]