வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அயோத்தி: ”அயோத்தி ராமர் கோவிலில் ஒரு மாதத்தில் ரூ. 25 கோடி நன்கொடையாக வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜன., 22ல் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்த நிலையில்ஜன., 23ல் பொது மக்கள் தரிசனத்திற்கான அனுமதிக்கப்பட்டனர்.
கோயில் திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், கோயில் வளர்ச்சிக்கு இதுவரை காசோலை, வரைவோலை மற்றும் ரொக்கமாக ரூ .25 கோடி வரை நன்கொடை வந்துள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழகத்தில் இருந்து மட்டும், 1.50 லட்சம் பக்தர்கள், அயோத்தி ராமரை தரிசனம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement