குருக்கள்மடம் ஏத்தாளைக்குளத்தில் எக்கச்சக்கமான வெளிநாட்டுப்பறவைகள் – காணப் படையெடுக்கும் மக்கள்!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாளை குளத்தில் வருடாந்தம் தஞ்சமடையும் வெளிநாட்டுப்பறைவகள்.

இக் குளத்தை அண்டிய பகுதியில் சில மாதங்கள் தங்கியிருக்கும் இப் பறவைகள் முட்டையிட்டு குஞ்சிபொரித்ததும் தனது தாயகம் நோக்கி மீண்டும் திரும்பும் என சொல்லப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் சில தீவுப்பகுதியிலிருந்து பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் தாண்டி பறந்துவரும் இப் பறவைகள் டிசம்பர் மாதப்பகுதியில் இருந்து ஏப்ரல் வரை இங்கு தங்கியிருப்பதாக சூழலியலாளர்களால் தெரிவிக்கின்றனர்.

இப் பறவைகள் இங்குள்ள மரங்களில் கூடுகளை கட்டி தங்கியிருக்கும் அதே வேளை இக் குளத்திலுள்ள மீன்களை பிடித்து உணவாக உட்கொள்கின்றது.

மரங்களில் இவை தங்கியிருக்கும் போது வெள்ளை போர்வை போர்த்தியது போல இக் குளத்தில் உள்ள மரங்கள் அழகாக காட்சி அளிக்கின்றது.

வருடா வருடம் அழையா விருந்தினர்களாக இப் பகுதிக்கு வருகைதந்து இக்குளத்தில் தங்கியிருந்து செல்லும் இப் பறவைகளும் இக்குளமும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாக சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இக் காலப் பகுதிகளில் அதிக மக்கள் வருகை தந்து பறவைகளை பார்வையிட்டு செல்லும் சுற்றுலா இடமாக ஏத்தாளைக் குளப்பகுதி மாறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.