டில்லி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இந்தியா ஒருபோதும் ஒரு நாடாக இருந்ததில்லை, இது ஒரு துணைக் கண்டம், என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் அவர் கூறியிருந்தார். பாஜக ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆ.ராசாவின் இத்தகைய கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதைக் காங்கிரசும் இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும் […]