இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பிரதமராக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப், 72, இரண்டாவது முறையாக நேற்று பதவி ஏற்றார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் -தெஹ்ரீக்- – இ – இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வெற்றி பெற்றனர்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ், 75 இடங்களிலும், முன்னாள் பிரதமரான, மறைந்த பெனசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. முத்தாகிதா குவாமி கட்சி, 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இம்ரான் கான் ஆதரவாளர்கள் அதிக அளவில் வென்ற போதும், அவர்களால் ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோவின் பாக்., மக்கள் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சி அமைத்தன.
இதையடுத்து, பிரதமரை தேர்வு செய்ய அந்நாட்டின் பார்லியில் நடந்த ஓட்டெடுப்பில், ஷெபாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். இதையடுத்து, அந்நாட்டின் 33வது பிரதமராக அவர் நேற்று முன் தினம் பதவியேற்றார். பாக்., ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, ஷெபாஸ் ஷெரீப்புக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர், ஷெபாஸ் ஷெரீப் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement