2-வது டி20 போட்டி: வங்காளதேச அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இலங்கை

சிலெட்,

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.

இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது. இதன்மூலம் வங்காளதேச அணிக்கு 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை இலங்கை நிர்ணயம் செய்துள்ளது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 37 ரன்களும், குசல் மெண்டிஸ் 36 ரன்களும் அடித்தனர். வங்காளதேச தரப்பில் அதிகபட்சமாக ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.