A young man was tragically killed in a train collision | ரயில் மோதி இளைஞர் பரிதாப பலி

மைசூரு : மனைவியுடன் மொபைல் போனில் பேசியபடி, தண்டவாளத்தை கடந்தவர், ரயில் மோதி உயிரிழந்தார்.

பீஹாரை சேர்ந்தவர் மனுகுமார், 27. இவர் மைசூரு, நஞ்சன்கூடின், தொட்ட கவலந்தே கிராமத்தில் வசித்தார். கார்பென்டராக பணியாற்றினார். திருமணமானவர். பணிக்கு சென்றபோது, மனைவியுடன் மொபைல் போனில் பேசுவது வழக்கம்.

நேற்று காலை 7:40 மணியளவில், பணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மனைவிக்கு வீடியோ கால் செய்து, பேசியபடியே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அதே வழியாக சாம்ராஜ்நகரில் இருந்து, மைசூருக்கு சென்ற ரயில் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த நஞ்சன்கூடு ரயில்வே போலீசார், உடலை மீட்டனர். வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.