The policeman who kicked the worshipers was suspended | தொழுகை நடத்தியோரை உதைத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

புதுடில்லி :டில்லியில் சாலையோரம் தொழுகை நடத்தியவர்களை எட்டி உதைத்த போலீஸ்காரர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ ஒன்றில், வடக்கு டில்லி இந்தர்லோக் சாலை ஓரத்தில் சிலர் தொழுகை நடத்துகின்றனர். அப்போது, அங்கு வரும் ஒரு போலீஸ்காரர், அவர்களை எட்டி உதைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட எதிர்க்கட்சியினரும், போலீஸ்காரரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தன.
இது தொடர்பாக டில்லி மாநகர போலீசின் வடக்கு மண்டல துணை கமிஷனர் எம்.கே.மீனா, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ததுடன், துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவி ட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.