சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”08.03.2024 முதல் 14.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 08.03.2024 முதல் 10.03.2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசவுகரியம் ஏற்படலாம். சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வரும் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.