வரும் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”08.03.2024 முதல் 14.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 08.03.2024 முதல் 10.03.2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசவுகரியம் ஏற்படலாம். சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வரும் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.