அருணாச்சலில் நெடுஞ்சாலை திட்டத்துக்கு ரூ.6,621 கோடி ஒதுக்கீடு

இடாநகர்: மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

அருணாச்சலப் பிரதேத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் 8 முக்கிய நெடுஞ்சாலை திட்டங்களுக்காக ரூ.6,621.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலை 913-ல், 265.49 கி.மீ தூரத்துக்கு 8 சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இந்த தொகுப்பில் 1,3,5 ஆகிய திட்டங்கள் ஹர்லி-தல்ஹியா பகுதியையும், 2 மற்றும் 4-வது திட்டங்கள் கர்சாங்-மியாவ்-காந்திகிராம்-விஜய் நகர் ஆகிய பகுதிகளையும் இணைக்கும். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.