Shobha sought support from the actors wife | நடிகர் மனைவியிடம் ஆதரவு கேட்ட ஷோபா

பெங்களூரு, : மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் மனைவியை, மத்திய இணை அமைச்சர் ஷோபா சந்தித்து ஆதரவு கோரினார்.

பெங்களூரு வடக்கு பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சர் ஷோபா, தொகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.

அதுபோன்று நேற்று சதாசிவ நகரில் உள்ள, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினியை சந்தித்து பேசினார்.

தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி அஸ்வினியிடம், ஷோபா கேட்டுக்கொண்டார்.

பின், ஷோபா அளித்த பேட்டி:

அஸ்வினியை சந்தித்து எனக்கும், பா.ஜ.,வுக்கும் ஆதரவு அளிக்கும்படி கேட்டு கொண்டேன். அவர் அரசியலில் இல்லை என்றாலும், அவரின் ஆதரவு பா.ஜ.,வுக்கு தேவை. புனித் ராஜ்குமாரின் சேவை, பிரதமர் மோடியை கவர்ந்தது. அவரை இருவரும் சந்தித்தும் பேசியுள்ளனர். எங்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. ஆதரவு அளித்தால் போதும் என்று கூறினேன்.

சதானந்த கவுடா எங்கள் தலைவர்; எங்களுடன் உள்ளார்.

கே.ஆர்.,புரம், புலிகேசி நகரில் நடந்த பா.ஜ., கூட்டத்திலும் கூட அவர் பங்கேற்றுள்ளார்.

இவ்வாறு அவர்கூறினார்.

மறைந்த நடிகர் புனித்ராஜ்குமார் மனைவி அஸ்வினியை சந்தித்த பா.ஜ., வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான ஷோபா, ஆதரவு கேட்டார். இடம்: சதாசிவ நகர், பெங்களூரு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.