சேலம், சேலம், அஸ்தம்பட்டி, மணக்காட்டை சேர்ந்தவர் நிஷார் பாட்ஷா, 45. சரக்கு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஹசீனா, 43. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். டிரைவருக்கும், திருப்பூர், நெரிபேரிச்சாலையை சேர்ந்த அருள்மரியா மகள் பிரியா, 45, இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. பிரியா, சேலம், கிச்சிப்பாளையத்தில் உள்ள பழனி என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்தார். அங்கு கடந்த, 13ல் துர்நாற்றம் வீசியது.
கிச்சிப்பாளையம் போலீசார், அங்கு சென்றபோது, டிரைவர் இறந்து கிடந்தார். கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த போலீசார், பிரியாவை தேடினர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பதுங்கியிருந்த அவரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நிசார் பாட்ஷா மது அருந்தி விட்டு வந்து சண்டை போட்டதோடு, விபசாரத்துக்கு செல்லும்படி தொந்தரவு செய்ததால், அவரது தலையில் குழவி கல்லை போட்டு கொன்றதாக தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement