ஐ.பி.எல். வரலாற்றில் தோனி, கோலி, ரோகித் ஆகியோரில் ஒருவர் கூட கேப்டனாக இல்லாத முதல் சீசன்

புதுடெல்லி,

இந்தியாவில் 2008 முதல் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இன்று தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் சென்னை – பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த சீசன் ஐ.பி.எல். வரலாற்றில் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரில் ஒருவர் கூட கேப்டனாக இல்லாத சீசனாக அமைய உள்ளது. 2008 முதல் கடந்த சீசன் வரை இந்த 3 பேரில் குறைந்தபட்சம் ஒருவராவது ஏதாவது ஒரு அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளனர். ஆனால் இந்த முறை 3 பேரும் வீரராக மட்டுமே உள்ளனர்.

இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மாவிடம் அவரே எதிர்பார்க்காத வகையில் மும்பை அணி நிர்வாகம் தடாலடியாக கேப்டன் பதவியை பறித்து விட்டது. கோப்பையை வெல்ல முடியாத விரக்தியில் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து 2021-ம் ஆண்டு போட்டியுடன் விலகிய கோலி இப்போது ஒரு வீரராக நீடிக்கிறார். தனது கடைசி சீசனில் விளையாட உள்ள தோனியும் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை துறந்து விட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.