விழுப்புரம் பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மூலம் பாசிச ஆட்சியைக் கொண்டு வர முயல்வதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். நேற்று விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. கூட்டணிக் கட்சி சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் ”இந்த தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை […]