பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மனைவியின் கார் டெல்லி கோவிந்தபுரி பகுதியில் திருடுபோனதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநில பதிவெண் கொண்ட டொயோட்டா பார்ச்சூனர் காரை வாகனத்தின் ஓட்டுநர் ஜோகிந்தர் ஓட்டிச் சென்று தனது வீட்டில் உணவுக்காக நிறுத்தியிருந்தார். அப்போது பிற்பகல் 3 மணியளவில் இந்த வாகனம் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது, மார்ச் 19ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் […]