சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது மகனை எம்.பி.யாகும் முயற்சியில், திருச்சி தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த தற்போதைய மதிமுக எம்.பி.யான ஈரோடு கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது மதிமுகவில் சலசலப்பை ஏற்றபடுத்தி உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, திமுக சார்பில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, அதில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் […]