கூச் பெஹார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விஷப்பாம்பைக்கூட நம்பலாமே தவிர பாஜகவை நம்ப முடியாது எனக் கூறி உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்துக் கொண்ட மம்தா பானர்ஜி, ”நமது அரசு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிறப்பாகச் செயல்பட்டது. திரிணாமுல் கட்சிக்குப் பேரழிவு ஏற்பட்டு பாஜகவுக்குச் செல்வம் சென்றது. விஷப் பாம்பைக் கூட நம்பி செல்லமாகக் கூட வளர்க்கலாமே தவிர பா.ஜ.க.,வை […]