மார்ச் மாதத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரராக கமிந்து மெண்டிஸை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது. இந்த மாதத்தின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இலங்கை வீரர் இவர் ஆவார்.
அண்மையில் இடம்பெற்ற பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட் தொடரின் செயல்திறனைக் கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆயசம யுனயசை மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆயவவ ர்நசெல ஆகியோரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெற்று முடிந்த பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 367 ஓட்டங்களை பெற்றதன்; மூலம் கமிந்து மெண்டிஸ் போட்டியின் அதிக ஓட்டங்களை பெற்ற் வீரர் ஆனார்.
இதற்கு முன்னர் வனிந்து ஹசரங்க மற்றும் பிரபாத் ஜெயசூரிய ஆகியோர் இலங்கை சார்பாக இந்த விருதை வென்றுள்ளனர்.