`என் சிகிச்சைக்கு அவர் ஏன் ஆடையை கழட்டனும்?’ – கதறிய மாணவி… டாக்டரை புரட்டி எடுத்த உறவினர்கள்

விழுப்புரத்தைச் சேர்ந்த கல்லுரி மாணவி ஜெயஸ்ரீ (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு முதுகுத் தண்டுவடத்தில் வலி ஏற்பட்டிருக்கிறது. அதற்காக சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் இயங்கி வரும் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அங்கு ஜெயஸ்ரீயை பரிதோதித்த எலும்பு மருத்துவர்கள், பிசியோதெரபி சிகிச்சைக்கு பரிந்துரைத்திருக்கின்றனர். அதற்காக கடந்த -ம் தேதியில் இருந்து அந்த மருத்துவமனைக்குச் சென்று பிசியோதெரபி சிகிச்சையை மேற்கொண்டு வந்திருக்கிறார் மாணவி ஜெயஸ்ரீ.

மாணவிக்கு பாலியல் தொல்லை

அதன்படி கடந்த 3-ம் தேதி சிகிச்சைக்காக சென்றபோது, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் சிகிச்சை கொடுப்பதற்காக சென்றிருக்கிறார்.  அப்போது ஜெயஸ்ரீக்கு அவர் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் சிகிச்சை அறைக்குள்ளிருந்து கூச்சலிட்டவாறு வெளியே ஓடி வந்த ஜெயஸ்ரீ, டாக்டரின் பாலியல் தொல்லை குறித்து செல்போன் மூலம் உறவினர்களிடம் கூறியிருக்கிறார். அதையடுத்து மருத்துவமனைகு விரைந்து வந்த மாணவியின் உறவினர்கள், சந்தோஷ்குமாரை பிடித்து சரமாரியாக அடித்து துவைத்தனர்.

அப்போது, “நான் அறைக்குள் சென்றதும் என்னை படுக்க வைத்துவிட்டு, அங்கிருக்கும் சி.சி.டி.வி கேமராக்களில் தெரியக் கூடாது என்பதற்காக நான்குபுறமும் ஸ்க்ரீனை மூடினார். பல இடங்களில் தொட்டு என்னிடம் தவறாக நடந்து கொண்டார். என்னை திரும்ப படுக்க வைத்துவிட்டு பேன்டை கழற்றுகிறார். எனக்கு சிகிச்சை கொடுக்க அவர் ஏன் பேன்டை கழற்ற வேண்டும் ? என்னைப் போல் எத்தனை பெண்கள்  பாதிக்கப்பட்டிருப்பார்கள் ? அதனால் இந்த டாக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்?” என்று மாணவி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

டாக்டர் சந்தோஷ்குமார்

இதற்கிடையில் டாக்டர் சந்தோஷ்குமாரை தரதரவென்று இழுத்துச் சென்று விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அத்துடன் சந்தோஷ்குமார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த மேற்கு காவல் நிலைய போலீஸார், டாக்டர் வெங்கடேஷை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை முடிந்ததும் போலீஸார் அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.