“தூக்கத்தில் இருந்து எழுந்தது போல…” – மோடியிடம் கேரண்டி கேட்ட ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்

சென்னை: “பிரதமர் மோடியைக் கண்டால் முதல்வர் ஸ்டாலின் அவ்வளவு பயப்படுகிறார். தனது சாதனைகளை சொல்வதை தவிர மோடி அர்ச்சனை தான் அதிகமாக உள்ளது. அண்ணன் ஸ்டாலினுக்கு இப்போது தூக்கம் வரவில்லை” என்று பாஜக தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.

பாஜக தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையில் செய்தியாளர்களைச் சந்த்தித்தார். அப்போது தமிழிசை கூறுகையில், "பிரதமர் மோடி தமிழகம் அடிக்கடி வர, வர முதல்வர் ஸ்டாலினுக்கு பதற்றம் அதிகரித்துள்ளது. தேர்தல் சீசனில் மட்டும் வந்துபோக இது என்ன பறவைகள் சரணாலயமா என்று பிரதமரின் வருகை குறித்து ஸ்டாலின் கேட்கிறார். அத்துடன் எல்லா பொய்களையும் அவிழ்த்துவிட்டு இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.