8 மாத குழந்தை உட்பட 7 குழந்தைகள், மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் – கொடூர சம்பவத்துக்கு காரணம் என்ன?!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மனைவி, எட்டு மாத குழந்தை உட்பட 7 குழந்தைகளை கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, சஜ்ஜத் கோகர் என்வரைக் கைது செய்திருக்கிறது. இந்த கொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டிருக்கும் காவல்துறை தரப்பு, “சஜ்ஜத் கோகர் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு கவுசர் (42) என்ற மனைவியும், எட்டு மாத குழந்தை முதல் 10 வயது வரை இருக்கும் நான்கு மகள்களும், 3 மகன்களும் இருந்தனர்.

காவல்துறை

இந்த நிலையில், கூலித் தொழிலாளியான சஜ்ஜத்க்கு போதிய வருமானம் இல்லாததால், குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டிருக்கிறது. கடும் வறுமையிலிருந்த சஜ்ஜத் கோகர், கோடாரியால் மனைவி உட்பட 8 குழந்தைகளையும் வெட்டிக் கொலை செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்டவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட சஜ்ஜத் பொருளாதார நெருக்கடியால் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.