சித்திரை புத்தாண்டை பொது மக்கள் மிக அவதானத்துடன் கொண்டாட வேண்டும் விபத்துக்களை தவிர்த்தும் பட்டாசு கொளுத்தும் சந்தர்ப்பங்களில் மிக அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த புத்தாண்டை நாம் கொண்டாட வேண்டும் மாவட்டத்தின் சகல பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடத்தில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல துறைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டை பொது மக்கள் மிக அவதானத்துடன் கொண்டாட வேண்டும் விபத்துக்களை தவிர்த்தும் பட்டாசு கொளுத்தும் சந்தர்ப்பங்களில் மிக அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும், ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த புத்தாண்டை நாம் கொண்டாட வேண்டும்.
சித்திரை புத்தாண்டை இன நல்லிணக்கத்துடன் கொண்டாட சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் ஒழுங்குபடுத்த ப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் சகல பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டை கொண்டாடும் சகல தமிழ் சிங்கள மக்களுக்கும் மாவட்ட செயலகம் சார்பாக தனது புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் தெரிவித்துள்ளார்.