நிசான் மேக்னெட் எஸ்யூவி திரும்ப அழைக்கப்படுகின்றது

இந்தியாவில் நிசான் நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற மேக்னெட் எஸ்யூவி காரில் முன்புற டோர் சென்சாரில் ஏற்பட்ட விழா கோளாறுகளை சரி செய்வதற்காக திரும்ப அழைத்துள்ளது. 

கடந்த நவம்பர் 2020 முதல் டிசம்பர் 2023 வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்களில் மட்டுமே இந்த பிரச்சனை எழுந்துள்ளது குறிப்பாக ஆரம்ப நிலை XE மற்றும் XL வேரியண்டுகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எவ்வளவு எண்ணிக்கைகள் என்ற விபரத்தை தற்போது இந்த நிறுவனம் வெளியிடவில்லை.

மேலும் இந்நிறுவனத்தின் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளபடி, ஓட்டுதல் செயல்பாடுகளில் இதனால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது தொடர்ந்து வாகனத்தை இயக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

பாதிப்படைந்துள்ள வாகனங்களில் உள்ள பாகத்தை முற்றிலும் இலவசமாக மாற்றித் தர டீலர்களிடமிருந்து வாகன உரிமையாளர்கள் அழைப்புகளை பெறுவார்கள் என குறிப்பிட்டு இருக்கின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.