அமெரிக்கா: சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து – 2 பேர் பலி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று டிசி-4 என்ற சரக்கு விமானம் புறப்பட்டது. புறப்பட்டு 11 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஆற்றங்கரை அருகே விமானம் விழுந்ததில் அதில் தீ பற்றியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.