பானிபூரி வாங்கி தருவதாக கூறி 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு அசோக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மெக்ராத் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகம் முன்பாக ஒரு பெண் பலூன் விற்பனை செய்வது வழக்கம். வியாபாரத்திற்கு வரும் போது அவர், தனது 8 வயது மகளையும் உடன் அழைத்து வருவார்.

அதன்படி, தாயும், மகளும் பலூன் விற்றுக் கொண்டு இருந்தனர். வணிகவளாகம் அருகே சென்று சிறுமி விளையாடியுள்ளாள். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஒரு மர்மநபர், சிறுமிக்கு பானிபூரி வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியும் அந்த நபருடன் சென்றுள்ளாள். இந்த நிலையில், சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அந்த நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது. உடனே அவர் நடந்த சம்பவங்கள் குறித்து அசோக்நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் 55 வயது மதிக்கத்தக்க நபர் தான் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.